பழங்கற்காலம்
காலம்: 20,00,000 ஆண்டுகள் முன்பு முதல் கி.மு.(பொ.ஆ.மு.) 8,000 வரை
பண்பாட்டுக் கூறு :
- வேட்டையாடுதல், உணவுசேகரித்தல்
- கைக்கோடரி, வெட்டுக்கருவி
இடைக்கற்காலம்
காலம்: கி.மு. (பொ.ஆ.மு.) 8,000 முதல் கி.மு. (பொ.ஆ.மு.) 1,300 வரை
பண்பாட்டுக் கூறு :
1.நுண்கற்கருவிகள்
2. தாவர உணவுகளைச் சேகரித்தல்
3. விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடுதல்
4. உலோகம் பற்றி இவர்களுக்குத் தெரியாது.
புதியகற்காலம்
காலம்: கி.மு.(பொ.ஆ.மு.) 2,000 முதல் கி.மு. (பொ.ஆ.மு.) 1,000 வரை
பண்பாட்டுக் கூறு :
- மெருகேற்றப்பட்ட கற்கோடரிகள்
- நுண்கற்கருவிகள்
- விலங்குகளைப் பழக்குதல்
- பயிரிடுதல்
- குழுக்களின் பெருக்கம்
- வேட்டையாடுவோர்- உணவு சேகரிப்போர், மேய்ச்சல் சமூகத்தினர் என இருவிதமான குழுக்களும் ஒரே சமயத்தில் வாழ்ந்தன
இரும்புக் காலம்
காலம்: கி.மு. (பொ.ஆ.மு.) 1,300 முதல் கி.மு. (பொ.ஆ.மு.) 300 வரை
பண்பாட்டுக் கூறு :
- பெருங்கற்கால ஈமச்சடங்கு முறை
- உணவு சேகரிப்போரும் மேய்ச்சல் சமூகத்தினரும் ஒரே சமயத்தில் வாழ்தல்
- குழுத் தலைவர் உருவாதல்
- இரும்பின் பயன்பாடு அறிதல்
- கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள், கருப்பு மட்பாண்டங்கள் உருவாக்குதல்
- கைவினைத் திறன்களில் சிறப்பு நிபுணர்கள் உருவாகுதல் குயவர்கள், கொல்லர்கள்
பண்டைய வரலாற்று மற்றும் சங்ககாலம்
காலம்: கி.மு. (பொ.ஆ.மு.) 300 முதல் பொ.ஆ. 300 வரை
பண்பாட்டுக் கூறு :
- இரும்புக் கால மரபுகளோடு சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வளர்ச்சி,
- வீரர்களை வழிபடுதல்,
- இலக்கிய மரபு, கடல்வழி வணிகம்.
