இந்தியக் குடியுரிமை

இந்தியக் குடியுரிமை

குடிமகன் (Citizen) - சிவிஸ் (Civis) என்னும் இலத்தீன் வார்த்தை - பொருள்  ரோமாபுரியில்  'குடியிருப்பாளர்'.

இந்திய அரசியலமைப்பின் பகுதி II இல் 5 முதல் 11 வரையிலான விதிகள் இந்தியக் குடியுரிமை பற்றி குறிப்பிடுகிறது. 

1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம், ஒருவர் இந்தியக் குடியுரிமையைப் பெறுதலையும், இழத்தலையும் பற்றி குறிப்பிடுகின்றது. ஒற்றைக் குடியுரிமையை நமக்கு வழங்குகிறது.

குடியுரிமை பெறுவதற்கான ஐந்து வழிமுறைகள் 

  1. பிறப்பால் பெறுதல்
  2. வம்சாவளியால் பெறுதல்
  3. பதிவு செய்தல்
  4. இயல்பு குடியுரிமை
  5. பிரதேசங்கள் இணைப்பு மூலம் பெறுதல்

மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வருகை புரிந்த தினமான ஜனவரி 9ஆம் நாள் வெளிநாடுவாழ் இந்தியர் தினம் (பிரவாசி பாரதிய தினம்) கொண்டாடப்படுகிறது.

குடியுரிமை இரண்டு வகைப்படும்

1. இயற்கை குடியுரிமை: பிறப்பால் பெறக்கூடியது

2. இயல்புக் குடியுரிமை: விண்ணப்பித்து பெறுவது


குடியுரிமை




ManiMegala


கட்டுரையாளர் பற்றி: மணிமேகலை
நான் கடந்த 5 ஆண்டுகளாக கல்வி சார்ந்த வலைப்பதிவுகளில் அனுபவம் பெற்றுள்ளேன். நானும் உங்களைப் போலவே இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகி, தேர்வுகளை எழுதி வருகிறேன்.
என்னுடன் இணையுங்கள்:
facebook  pinterest  youtube  whatsapp twitter instagram telegram

கருத்துரையிடுக

புதியது பழையவை